பச்சை நிலம்: ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

Updated on
1 min read

போட்டது முளைத்தது
எங்க பாட்டன் காலத்தில் 
பஞ்சம் பசி பட்டினி  ஏதும்
கொஞ்சமும் நெருங்கவில்லை
இட்டதெல்லாம் இயற்கை உரம்
எப்போதும் பச்சை தான் எங்கநிலம்

எங்கிருந்தோ வந்தது
எமனாக சீமைக் கருவேல்
வெட்ட வெட்ட வளர்ந்தது 
வீதியெங்கும் முளைத்தது 
தண்ணீரையெல்லாம் உறிஞ்சதால
கருகிருச்சே பச்சை நிலம்.

விளைச்சல் குறைஞ்சதால
சொன்னாங்களே பல வழி
அதைக்கேட்டுப் போட்டோமே
ரசாயன உரத்தை அள்ளி
மண்ணு மலடாச்சு
எங்க வயல் வீட்டு மனையாச்சு.

நெல்லு கரும்பு என
பொன்னா விளைஞ்ச பூமி
கல்லா முளைச்சிடுச்சி
ரசாயன உரமும் கருலேல மரமும்
கருவ அறுத்த பின்னே
எங்கே இருக்கும் என் பச்சை நிலம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com