பச்சை நிலம்: சசி எழில்மணி

Updated on
1 min read

முப்போகம் விளைந்த நிலம்
முடக்குற்றுப் போனது
தப்பாமல் பெய்த மழை
தவறித்தான் போனது

செயற்கை உரங்களால்
நிலம் கெட்டுப் போனது
பொன் விளையும் நிலமெல்லாம்
புண்பட்டுப் போனது

நீரின்றி தவிக்குது
வறட்சியால் துடிக்குது
மண்ணில் வாழும் உயிரெல்லாம்
உணவுக்காக ஏங்குது
 
பாலையாய் மாறுது
பச்சை நிலம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com