முப்போகம் விளைந்த நிலம்
முடக்குற்றுப் போனது
தப்பாமல் பெய்த மழை
தவறித்தான் போனது
செயற்கை உரங்களால்
நிலம் கெட்டுப் போனது
பொன் விளையும் நிலமெல்லாம்
புண்பட்டுப் போனது
நீரின்றி தவிக்குது
வறட்சியால் துடிக்குது
மண்ணில் வாழும் உயிரெல்லாம்
உணவுக்காக ஏங்குது
பாலையாய் மாறுது
பச்சை நிலம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.