பச்சை நிலம்: ஜெ.முத்துலெட்சுமி

Updated on
1 min read

கானி நிலம் காளை மாடு கொண்டு உழுது,
பருவத்திலே பக்குவமாய் பயிர்ட்டேனே,

பச்சை நீ பிடிக்க களைபறிக்க காசு இல்லாம
என் கண்மணி காது கம்மல வித்தேனே

பருவத்துக்கு நீ வரயிலே பத்து வட்டிக்கு
நான் வாங்கி பாசமா உரமிட்டேனே,
உயிர்கொடுத்தேனே,

சர சர சக்கரமாய் சந்தோசமாய் 
கதிர் விட்டு வந்தாயே,

நெஞ்சி குளிர்ந்தேனே,
பஞ்சம் போகும்மென,

பல வருசமா கேட்கிறாளே,
பார்வதி பட்டு புடவை,

பத்திரமா கதிர் அறுத்து
பொங்கள் கூட்டி பட்டுபுடவயும்
கொடுத்திட நினைத்தேனே,

பாழா போன பருவ மழை
பாகத்து பாதித்தே,

என் கனவு கானல் நீராய் போனதே,
என் கடவுள் கண்டுகொள்ளாமல் போனதேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com