கண்ணுக்கு குளுமை தரும் பச்சை நிலம்!
காண்போரை இச்சை கொள்ளச்செய்யும் பச்சை நிலம்!
வயலெல்லாம் நாற்றுக்களாய் வளைந்தாடி
வளர்ந்து நின்று உழவனை ஊக்குவிக்கும் பச்சை நிலம்!
தீயாய் சுட்டெரிக்கும் கத்திரி தணலினிலே
தென்றலாய் உடல்வருடும் ஓங்கி வளரும் பச்சை நிலம்!
வற்றாத நதிகள் எப்போதும் பாய்ந்தோட
வளர்ந்து அசைந்தாலும் புவியெங்கும் பச்சை நிலம்!
குன்றாத மழை தப்பாமல் பொழிந்திட்டால்
நன்றாக செழித்து வளர்ந்திடும் தரணியெங்கும் பச்சைநிலம்!
பசுமை போர்த்தி அழகு சேர்க்கும் சாலையோர மரங்கள்
குன்றின் மீது போர்வையாக வளர்ந்து அழகூட்டும் மரங்கள்!
வீடு தோறும் வீதி தோறும் மரங்கள் வளர்த்திட
கண்கள் காணும் காட்சியெல்லாம் பச்சை நிலம்!
இயற்கை வண்ணம் பூசி செயற்கை சிறிதும் இன்றி
பிறக்கும் குழந்தை பச்சை நிலம்!
இச்சை கொண்டு எல்லோரும்
பச்சை பேண முனைந்திடின்
பாரெங்கும் காணக்கிடைக்கும்
பசுமை கொஞ்சும் பச்சைநிலம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.