பச்சை நிலம்: வெற்றிப் பேரொளி

Updated on
1 min read

வறண்டிட்ட  ஆறு!  வழயில்லா வாய்க்கால்! 
மறந்திட்ட   மழைபெய்யா  வானம்! - இறப்பதனின் 
எல்லை  வரைச்செல்லும் ஏருழவன்   காண்பானோ
நெல்விளையும்  பச்சை நிலம்?

மணல்சுரண்டிக்  கொழுத்திட்ட  மாபாத  கர்தாம் 
பிணமாக்கி  ஆற்றைப்  புதைத்தார்!  -  அணங்கே! 
காரின்றி  வானமும்  காயும்  அதுபோல  
நீரின்றிப்  பச்சை  நிலம்!

விவசாயி  கண்ணில்  விரிகிறது   ஏக்கம்!
சவமாகும்  முன்சாத்  தியமா?  -  தவமதனின் 
இச்சை  வரம்போல்  இளநாற்று  காற்றிலாடும் 
பச்சை  நிலத்தின்  பரப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com