பச்சை  நிலம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
பச்சைநிலம்  போல்வயல்கள்  பட்டு  டித்திப்            பருவமெய்த   மங்கையவள்   முகத்தைப்   போலஇச்சையினைத்   தூண்டுமெழில்  பயிர்க  ளாக            இளங்காற்றில்   கொடியசைதல்   போல  சைந்துமூச்சினிலே  முற்றியநெல்   மணத்தைச்  சேர்த்து            முப்போகம்   விளைந்திட்ட   தஞ்சை   மண்ணோபேச்சிழந்தே   ஊமையான   பேச்சா   ளன்போல்            பெப்பெப்பே   ஆனதின்று   நீரே  யின்றி !பெய்தமழை   பொய்த்திடவும்   பாய்ந்த   ஆறோ            பெரும்வழக்கில்   அடைப்பட்டு   முடங்கிப்   போகசெய்தமூன்று   போகமது   ஒன்றாய்   ஆகிச்            செய்வதற்கு  வழியின்றி   அதுவும்   போகமெய்குறுகிப்   பெற்றகடன்   அடைப்ப  தற்கு            மெய்யாக   ஒருகாசும்   கையி   லின்றிஉய்யவழி   தெரியாமல்    வரிசை   யாக            உயிர்தன்னை   விடுகின்றார்   உழவ   ரின்று !நலமாக   நாமுண்ண   நலிவை  யேற்று            நாளுழைத்த   உழவரின்று   வாடு  கின்றார்உலகத்தைக்   காத்தவனோ   பயிரைக்   காக்க            ஊரின்முன்   நிற்கின்றான்   கையை  ஏந்தி !குலம்காக்கக்   குலத்தொழிலாம்   விவசா  யந்தாம்            குலைந்திடாமல்   காப்பதற்கே   தில்லி   மண்ணைக்களமாக்கிப்   போராடும்   விவசாய்  கட்குக்            கரம்கொடுப்போம்  பசும்நிலத்தைக்   காப்போம்   வாரீர் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com