பச்சை நிலம்: கலியமூர்த்தி

Updated on
1 min read

பச்சை எடுத்திருக்கிறது
எதிர்சாரி புங்கை மரம்..

பச்சையும் சிவப்புமேறி வர்ணஜாலம்
காட்டும் நிலம் பார்த்திறங்கும் கிளைகளில்

இறகு உலர்த்திக்கொண்டிருக்கின்றன
பெயர்தெரியாக் குருவிகள்..

அவற்றின் திடீர் பறத்தலில் திரண்டிருக்கும்
நீர்த்துளி புழுதிகரைத்து கீழிறங்குகிறது..

மனித மனங்களின் விகாரம் கலைத்திடத்
தேவைப்படும் பெருஞ்சண்டை போலவோ,
பெருமவுனம் போலவோ, பெருமழையொன்று
எப்போதும் தேவையாயிருக்கிறது
அழுக்கு கரைக்க.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com