வயலெல்லாம் பசுமையாய் வளமைக் கண்டேன்
வரப்பெல்லாம் நீரோடி வழியக் கண்டேன்
இயல்பான சூழல்கள் இனிக்கக் கண்டேன்
எழிலாகப் பறவைகளும் எங்கும் கண்டேன்
துயரங்கள் நீங்கியதால் துணிவாய் நெஞ்சம்
துடிப்போடு விழாக்களுமே தொடரக் கண்டேன்
பயமில்லை வாழ்வினிலே பசியும் இல்லை
பகல்கனவாய் கண்டேனே பதறிப் போனேன் !
நதியெல்லாம் கலந்திடவே நாட்டில் ஒன்றாய்
நலத்திட்டம் வேண்டிடுவோம் நன்மைக் காண
விதியென்று வாழாதீர் விரைந்துத் திட்டம்
விதித்திடவே வழிகாண்பீர் விதியை வெல்ல
கதியென்று காலங்கள் கரைந்துப் போக
கனவெல்லாம் நனவாகக் காண்பீர் மாற்றம்
மதியினாலே மாறாத மாற்றம் இல்லை
மாறிடுமே பச்சையாய் மாற்றம் கொண்டே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.