பச்சை நிலம்: கவிஞர்.கோவிந்தராஜன் பாலு.

Updated on
1 min read

வயலெல்லாம் பசுமையாய் வளமைக் கண்டேன்
        வரப்பெல்லாம் நீரோடி வழியக் கண்டேன்
இயல்பான சூழல்கள் இனிக்கக் கண்டேன்
      எழிலாகப் பறவைகளும் எங்கும் கண்டேன்

துயரங்கள் நீங்கியதால் துணிவாய் நெஞ்சம்
        துடிப்போடு விழாக்களுமே தொடரக் கண்டேன்
பயமில்லை வாழ்வினிலே பசியும் இல்லை
        பகல்கனவாய் கண்டேனே பதறிப் போனேன் !

நதியெல்லாம் கலந்திடவே நாட்டில் ஒன்றாய்
       நலத்திட்டம் வேண்டிடுவோம் நன்மைக் காண
விதியென்று வாழாதீர் விரைந்துத் திட்டம்
      விதித்திடவே வழிகாண்பீர் விதியை வெல்ல
கதியென்று காலங்கள் கரைந்துப் போக
      கனவெல்லாம் நனவாகக் காண்பீர் மாற்றம்
மதியினாலே மாறாத மாற்றம் இல்லை
      மாறிடுமே பச்சையாய் மாற்றம் கொண்டே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com