பச்சை நிலம்: பூ. சுப்ரமணியன் 

Updated on
1 min read

‘கொக்கரக்கோ’ சேவல் கூவின 
கண்மணிகளைக் காவல் காத்த 
கண்இமைகள் திறந்தவுடன்  
என் வீட்டுவாசலைத் திறந்து
நின்று பார்த்தேன் !

கண்ணுக்கெட்டிய தூரம்
எங்கும் பச்சைக் கம்பளம்
விரித்துப் போட்டது யார் ?
இயற்கை விரித்த பச்சைநிலமா ?

பச்சை நிலத்தில் காணும்
பசுமை நாற்றின் நுனியில் 
வைரக் கிரீடங்களாக
மார்கழி பனித்துளிகள் !

கலப்பையுடன் உழவர்கள் 
கஞ்சிக்கலயத்துடன் பெண்கள்
கொஞ்சி விளையாடும் கிளிகள்
மகிழ்வுடன் பறக்கும் நாரைகள்
எல்லாமே பச்சை நிலத்திலே 
நான் 
கண்டு மகிழும்போது....
‘ வறட்சி நிவாரணம் வழங்கு ‘
விவசாயின் உரத்த குரல்
கேட்டு விழித்தேன். 

இறைவா !
எல்லாமே பகல் கனவு 
எதிரே பார்த்தேன் 
பச்சை நிலங்களெல்லாம் 
பல மாடிக் கட்டிடங்களாக 
விளைந்து நின்றன !  .  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com