கைகோர்ப்போம்: பேராசிரியர்.கவிஞர் பு.மகேந்திரன்

Updated on
1 min read

சாதி மத பேதமின்றி
சமத்துவமாய் வாழ்வோம் இவ்வுலகில்
கண்ணிருந்தும் குருடராய்
காசுஇருந்தும் கருமியாய்
காலமெல்லாம் வாழ்ந்து என்ன பயன்
அடுத்தவர் நஷ்டத்தை
அயலாரின் துன்பத்தை
கேட்பாரற்று நீயும் ஒரு நாள்
வீதியில் கிடக்க நேரிடலாம்
மனிதனாக பிறந்த நீ
மனித நேயத்தை மல்லிகை
பந்தலாய் வளர்த்திட வேண்டும்
ஒருங்கிணைந்து வாழ வேண்டும்
நன்மைகள் நடக்கட்டும்
புதுமைகள் பிறக்கட்டும்
புத்துணர்ச்சி ஒருங்கிணையட்டும்
விஞ்ஞானம் வளர்ந்திட
வியாபாரம் சிறந்திட
ஒன்று கூடி வெற்றி பெறுவோம்.
ஒற்றுமையாய் வாழ்வோம்
ஒருங்கிணைந்து நடப்போம்.
தமிழ்மொழியாம் செம்மொழியை உயர்த்துவோம்
தினமும் மனித நேயத்தை வளர்த்திடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com