கைகோர்ப்போம்: லூர்து எஸ் ராஜ்

Updated on
1 min read

ஒருகை ஓசை ஒலிப்பதில்லை –இங்கு
இருகையோசையை   எதிர் ப்பதில்லை
ஆயிரம் கைகள் கூடிவிட்டால் –அநீதி
அஞ்சாமல் எழுந்து நிற்பதில்லை.

கைகளின் சக்தி மகத்தானது-அது 
சாதி சமயக் குறியில் லாதது
உழைக்கும் கைகள் உறுதியானது –அது
உலகுக்கு குழைக்க மறுத்திடாதது   

நெசவாளர் குயவர் கூலியென – அதன்  
நிலையினைப் பிரித்திட வியலாதது
கைகளை உயர்த்திப் போராடுவோம் –உழவர்  
உரிமைக் குரலதை  ஒலித்திடுவோம்

இளைஞர் பெண்கள்  முதியவர் –என  
எல்லாரும் சேர்ந்தணி வகுத்திடுவோம்,
எங்கு நடந்தாலும் அநீதிதான்  – அதை  
எப்போது நடந்தாலும் கூடி எதிர்ப்போம்.

வல்லான் கொடியனைக் கண்டஞ்சிடோம்  –இனி  
வாய்பொத்தி கைகட்டி நின்றிடோம்
இளங்காளையர்  குழுவின்  தலைமையிலே-நாம் 
இழந்தன அனைத்தையும் மீட்டெடுப்போம் .  
காலமும் தூரமும் தடையன்று –அதனால்  
கடலோ கரையோ நடுத் தெருவோ
கணமே கூடுவோம் எதிர்த்திடுவோம்  –ஒரு
கடலென அலைபோல்   கைகோர்ப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com