மழையைத் தேடித் தேடி
அலுத்துப் போன ஆறுகள்
குப்பைகளால்
முகத்தை மூடிக்கொண்டு இருக்கின்றன..
ஆட்டத்தை மறந்து போன மயில்கள்
மைல்கற்களில் அமர்ந்து
ஹிந்தி கற்கும் யோசனையில்
மூழ்கிப் போயின..
தண்ணீர் தேடி அலைகிறார்கள்
ஒரு கூட்டம் குடங்களோடு..
இன்னொன்று
குளிர் விக்கும் பானங்களுக்காக..
எங்கே போனது இந்த மேகக்கூட்டங்கள்
அடித்துக் கேட்கின்றன
கடல் அலைகள்
சி.பி.ஐ. விசாரணை கேட்டு..
வழிந்தோடும் வியர்வையோடும்
அடங்காத தாகத்தோடும்
பார்த்துக் கொண்டு இருந்த
சூரியன்
காரணம் கேட்டு
தகவல் அறியும் சட்டம் மூலமாக
வருண பகவானுக்கு
கடிதம் அனுப்பியது..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.