சூரியத்தாகம்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

Updated on
1 min read

மரங்கள் இல்லா சாலைகள்
மழையே பொழியா வானிலை
ஊர்கள் எல்லாம் ஆலைகள்
நகர்களில் குவியும் மக்கள்
ஏரிகள் தோறும் குடியிருப்புக்கள்
ஏக்கர் கணக்கில் வீட்டுமனைகள்

தங்க நாற்கரச் சாலைகள்
தடையே இல்லா போக்குவரத்திற்கு
உயர உயர மேம்பாலங்கள்
நீரே காணாத ஆறுகள்
உடைந்து போன குன்றுகள்
உயிரை உறிஞ்சும் ஆழ்துளை கிணறுகள்.

குளங்கள் எல்லாம் தூர்த்தாச்சு
வளங்கள் எல்லாம் சிதைஞ்சாச்சு
கடலும் கூட பகையாச்சு
இயற்கை எல்லாம் செயற்கையாச்சு
ஓசோன் படலம் சுருங்கிட
வீசும் சூரியக் கதிர்களில்
வெப்பம் வேகமாய் வீசிட
பசுமைத்தாகம் குறைந்திட
பற்றிய சூரியத்தாகம் எரிந்திட
பசுமை பூமியும் பாலையாச்சு

வீடுகள் தோறும் மரம் வளர
நாடுகள் எல்லாம் சோலைகளானால்
கேடுகள் பூமியை விட்டகலும்
குறைந்திடும் குளிர்ந்திடும் சூரியத்தாகமுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com