கோடை மழை: கவிஞர் மா.உலகநாதன்

Updated on
1 min read

சூரியதாகம் தீர்ந்ததும்
கோடைமழை வருவது தானே
பொருத்தம்;

வள்ளுவன் அன்றே வாய்
மலர்ந்தான்;
விசும்பின் துளிவீழ்ந்தால் தான் பசும்புல்
தலைகாட்டுமென்று;

விழ மறுக்கிறதே மழைத் துளி;
ஏன் இந்த நிலை?
வேரோடு வெட்டிச் சாய்த்த
மரங்கள் எத்தனையோ?

கக்கும் வாகனப் புகையில் தான் எத்தனை நச்சு?
இயற்கையை மறந்தோம்,
இன்னலுக்கு ஆளானோம்;

நீருக்காக ஏங்கும் பறவைகளுக்காகவும்.
விலங்கினங்களுக்காகவும்
தாவரங்களுக்காகவும்,மழை
வரம் தருவாயா,கோடை மழையே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com