கோபம் என்ன
கோடை மழையே
தாகம் தீர்க்க
கொட்டு மழையே!
ஏரி குளங்கள்
வறண்டு போனது
ஏனோ வாழ்க்கை
என்றே ஆனது!
காடு கழனி எல்லாம்
காய்ந்து போனது
ஆடுமாடுகள் எல்லாம்
அழாமல் அழுகிறது!
வேதியல் மாற்றமோ
இயற்கை வேரறுப்போ
எதுகாரணம் என்றாலும்
எங்களை மன்னிப்பாய்!
கருமுகில்கள் வானில்
கவியட்டும்! பூமியில்
பெருமழை பெய்து
நெஞ்சம் நிறையட்டும்!
போதுமிந்த வெப்பம்
பொழியட்டும் கோடைமழை!
ஆதிபகவன் தாள்பணிந்து
அனைவரும் வேண்டுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.