கோடை மழை : வேலூர்.வெ.ராம்குமார்

Updated on
1 min read

சுட்டுபொசுக்கும் கதிரவனால்
அல்லோலப்படும் மக்கள்...
துண்டு துண்டு பாண்டங்களாய்
விரிசல் விடப்பட்ட பூமி!

பசுமைப் பொலிவையிழந்து
சருகு இலைகளோடு மரங்கள்,
வற்றிப்போன நீர்நிலைகள்,
மேய்ச்சல் நிலங்களில்
புற்களை தேடி அலையும் கால்நடைகள்,
விளைநிலங்களில்
பாத்திகட்டப்பட்ட நிலையில்
வாடிய பயிர்கள்,மரங்களின்
நிழல்களை தேடி ஏமாற்றமடையும்
வழிபோக்கர்கள்,தாகத்தால்
செத்து மடியும் பறவைகள்,
புழுதியடைந்த மாடி கட்டிடங்கள்,
மழைக்காக யாகத் தீ வளர்க்கும்
பக்தர்கள்,கண்களில் கனவோடும்,
நெஞ்சில் ஈரத்தோடும் மழைக்காக
காத்திருக்கும் விவசாயிகள்..

கோடை இடி முழக்கத்துடன்
பெய்யென பொழி மழையே..
மண்ணை மட்டுமல்ல,எங்கள்
மனங்களையும் குளிர்விக்க..
தேர்தல் தேதி போல இம்முறை
நீயும் ஒத்திபோடாதே,உன் கடமையை!

நீ பொய்த்தால்,மண்வளத்தை
மலடாக்கி,கூறு போட்டு விற்பனை
செய்ய பல கும்பல்கள்
காத்திருக்கவே செய்கின்றன...
ரியல் எஸ்டேட் என்ற பெயரிலும்!
நில புரோக்கர்கள் என்ற பெயரிலும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com