கோடை மழை:  H ஹாஜா மொஹினுதீன்

Updated on
1 min read

வாய்க்கால் என்பது வரப்பாய் மாற ; 
குட்டையும் குளங்களும் வறட்சியில் ஏங்க ;
ஏரிகளும் ஏக்கங்களில் பார்க்க ;
கடல் நீரோ  ஆவியாய் போகுதே !

வியர்வையின் தாக்கம்  மரங்களையும் வாட்டுதே ; 
சட்டையை கழட்டுவதுபோல் பட்டையை உரிக்கிறதே ;
தாகத்தால்  வாய்பிளந்த வயல்கள் -
அனல் காற்றில் ஆவி பறக்குதே !

கண்ணீரும் வருவதில்லை ;
கவலையில் நான் இருந்தும் !
ஈரப்பசை இல்லாமல் -
இறைஞ்சுகிறேன்  இரு கை  ஏந்தி !

கோடை மழையே  வந்துவிடு !
கோபத்தையும்  குறைத்துவிட்டு !
பாவமான எங்களுக்கும் -
பரிவையும் காட்டிவிட்டு ! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com