கோடை மழை: கமலா பார்த்தசாரதி

Updated on
1 min read

வா வாவென
வயல் வெளிகள்
பல்லாயிரம் கைகளால்
வரவேற்று அரவணைக்க 

தா தா எமக்கு
உயிர் நீர் என 
எமதருமை விவசாயிகள்
வானம் பார்த்து நிற்க

வருக வருக வென்று
அனைத்து நீர் நிலைகளும்
வழி மேல் விழிவைத்து
உன் வரவை எதிர்பார்த்திருக்க
உழவருக்கு வரமாய்
மற்றவர்க்கு அருட்கொடையாய்
வறண்ட பூமிக்கு அமுதமாய்
வாராய் நீ கோடை மழையே

மழழையின் இனிமை போல் 
இசையின் இதம் போல் 
இறையின் கருணை போல்
அமுததாரையாய் இறங்கி வாராய்
கோடை மழையே..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com