கோடை மழை: சிவகுமரன் நடராஜன்

Updated on
1 min read

பசுமை இழந்து வெயிலால்
செம்மை தாங்கிய
பயிர்களுக்கு பயனில்லை
எனினும் எங்களுக்கு நீ வேண்டும்
கோடை மழையே |

காய்ந்த வயலுக்கும்
வெடித்த நிலத்துக்கும்
பசித்த விலங்குகளுக்கும்
இரை தேடும் பறவைக்கும் பயனில்லை
எனினும் எங்களுக்கு நீ வேண்டும்
கோடை மழையே |

காய்ந்த வயிறு, கந்தல் ஆடை
போராடி போராடி புழங்கிப் போன
விவசாயி வாழ்விற்கு வளம் அளிக்க
கிஞ்சித்தும் வழியில்லை
எனினும் எங்களுக்கு நீ வேண்டும்
கோடை மழையே |

கானல் நீரை காணமல் போக செய்யவும்
தகிக்கும் கான்கிரீட் கட்டிடங்களை
தணிய செய்யவும், வெயிலில் வேகும்
தினக்கூலி சகோதர்களின் வியர்வை
துடைக்கவும், இல்லத்தரசிகளுக்கு
 இதமளிக்கவும் வா வா
கோடை மழையே |

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com