கோடை மழை: பேராசிரியர் கவிஞர் பு. மகேந்திரன்

Updated on
1 min read

கோயில் மழை
மனிதா பூமியைக் காத்திடு
மாறுதே வெப்பம் உணர்ந்திடு
வையகத்து வெம்மையைப் போக்கி
குளுமையைத் தந்திட வருகவே

அனல் பறக்கும் காற்று
அடைமழை மனதில் நின்றது.
மழை பொழிந்தது.
மழையோ மழை
மழலைகள் குதூகலம்

பஞ்சபூதங்களின் பரிமாணங்கள்
பரவசம் அதிர்வலைகள்
பூமித் தாயின் வெப்பம் தணிக்க
இறங்கிடுமோ வானம்
பொழிந்திடுமே கோடை மழை

பொங்கட்டும் மகிழ்ச்சி
மக்கள் மனதில்
மரங்களை வளர்ப்போம்.
மாமழையைப் பெறுவோம்.

பூமியில் வெப்பதனில்
புதிதாய் தொடரட்டும் மழை
நல்ல மழை பெறுவோம்
நலமுடன் வாழ்வோம் பல்லாண்டு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com