கோடை மழை: பொன். குமார்

Updated on
1 min read

வெயில் காலமானாலே 
வியர்த்து கொட்டுகிறது.
உஷ்ண தாக்குதல்
உடலை வாட்டுகிறது.

பூமி மேனி எங்கும்
பொங்குகிறது வெப்பம்.
மரங்கள் எல்லாம்
வெயிலில கருகும்.

பருகும் தண்ணீருக்கும்
பற்றாக் குறை ஏற்படும்.
பறவைகளும் நீரின்றி
புதிய இடம் போய்விடும்.

மழை பெய்யாதோவென
மக்கள் மனம் எங்கும்.
கோடை மழை பெய்தாலே
கொஞ்சம் வெப்பம் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com