கோடை மழை: முத்துலெட்சுமி .ஜெ

Updated on
1 min read

திசைகளற்ற திரைகடலின்
திசைமானியற்ற
பயணத்தின்
தென்றல் நீ

வறண்ட காற்றில்
உலர்ந்த நாவிற்கு
தூவும் கோடை
மழை நீ

பாதை இதுவென
இலக்கற்ற பயணத்தின்
வழித் துணையாய்
வந்த வரம் நீ

வீசும் காற்றிலே
வாசமாய் கலந்திருக்கிறாய்
நிறைந்திருக்கும் நீரிலும்
நீயே இருக்கிறாய்

ஆளரவமற்ற
தனிமையில்
நான் பேசிக் கொண்டிருப்பதெல்லாம்
கேட்டுக் கொண்டிருப்பதாய்

உணரவைக்கும் நீ

என்னுள் இருந்து
என் தனிமைகளுக்கு
இனிமைகள் சேர்க்கும்
கனவான நீ

அழகிய வரம் நீ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com