கோடைமழை: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
மழலையின்வாய்   இசைத்தமிழைக்  கேட்டல்  போன்றும்    மரத்தினிலே   பழுத்தபழம்   சுவைத்தல்   போன்றும்அழகான   சிற்பத்தைக்   காணல்  போன்றும்    அனலிடையே   தென்றலது   தழுவல்   போன்றும்உழவுசெய்த   நிலப்பயிரின்   பசுமை  போன்றும்    உச்சிவெயில்   தனில்நிழலில்  அமர்தல்  போன்றும்முழங்குயிடி   ஒலியோடு   கோடை   தன்னில்    முகம்குளிரப்   பெய்மழையோ   இன்பம்  நல்கும் !வலைக்குள்ளே   சிக்கியமீன்   துடித்தல்   போன்று    வறட்சியிலே   துடித்திட்ட   விலங்கும்   புள்ளும்கலைநயத்தில்   மிளிர்கின்ற    ஓவி  யம்போல்    கண்ணொளிரும்   தாகந்தான்  தீரு  மென்றுஇலையுதிர்ந்த   மரங்களெல்லாம்   துளிர்த்தல்   போன்றே    இல்லாமல்   இருந்தபுல்லும்   தலையைக்   காட்டும்குலைதொங்கும்   வாழைமர   எழிலைப்  போன்று    குதூகலம்தாம்  கோடைமழை  பெய்யும்   போதே !வியர்வைதுளி   எரிச்சலினை   இதமாய்   மாற்றி    வீசும்தீக்   காற்றுதனைப்   பதமாய்   மாற்றிஅயற்சிமன   அழுத்தத்தை   மகிழ்வாய்   மாற்றி    அலையெழுப்ப   ஏரிகளை  நீராய்  மாற்றிசெயலற்ற   இயக்கத்தைச்    செயலாய்  மாற்றிச்    செழிப்பிழந்த   நிலந்தன்னைச்   செழிப்பாய்   மாற்றிஇயற்றமிழ்தான்   அளிக்கின்ற   இன்பம்   போல    இனிமையினை  அளிக்கும்நல்   கோடை   மழையே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com