எனை நனைத்த மழை:  அழகூர். அருண். ஞானசேகரன்

Updated on
1 min read
கனிவுடனும்  பொறுப்புடனும்  கருத்துடனும்  செயல்படும்நல்புனிதநன்  நாடென்றிதைப்  போற்றுகிறார்!---இனியென்றும்,எங்குமே  வறுமையது  இன்னாட்டில்  இல்லையெனும்மங்கலமே  எனைநனைத்த  மழை!நாடின்றோர்  வல்லரசென  நம்மைபிறர்  போற்றுகிறார்கோடிகோடி  மக்கள்நாம்  கொண்டாட!---நாடின்றுதுலக்கமதை  பலப்பலத்  துறைகளிலும்  கண்டமறுமலர்ச்சியதே  எனைநனைத்த  மழை!இன்னாட்டின்  வளர்ச்சியதும்  ஏற்றமுறக்  கண்டதெலாம்மன்மோகன்  ஆட்சிதனின்  மகிமையால்!---முன்னமதாய்,வீட்சிகண்ட  நிதிநிலைமை  வீருகொண்டு  எழுச்சியுற்றமாட்சியதே  எனைநனைத்த  மழை!ஆழ்ந்தமன  உறுதியுடன்  அயராமல்  போராடிபாழ்பட்ட  சட்டம்நீங்கப்  பார்த்திட்டார்!---ஏழுநாட்கள்துகிலின்றிப்  போராடி  துலக்கமதைக்  கண்டயிளைஞர்மகிமையதே  எனைநனைத்த  மழை!பொழுதெல்லாம்  போராடி  போற்றத்தக்க  வெற்றிகண்டார்பழுதற்ற  மாணவர்தம்  பண்பினால்!---எழுச்சிகண்டு,நெகிழ்ந்திடுதே  மக்கள்தமின்  நெஞ்சமெலாம், காண்கின்றமகிழ்ச்சியதே  எனைநனைத்த  மழை!கொண்டமன  உறுதிசிறிதும்  குலையாமல்  மாணவர்கள்எண்ணற்றோர்  போராடும்  எழுச்சியற்றார்!---ஆண்டாண்டாய்,வேண்டிநின்ற  அவர்களன்று , விவேகமுடன்  காத்திட்டமாண்பதுவே  எனைநனைத்த  மழை!                 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com