எனை நனைத்த மழை: சு.ஜெயக்குமார்​

Updated on
1 min read

வானில் இருள் சூழ்ந்தது
என் மனதில் ஒளி நிறைந்தது
மழைத் தூரல் விழுந்தது
என் உள்ளம் குளிர்ந்தது
இளமை துள்ளிக் குதித்தது
என் நெஞ்சம் பாடி மகிழ்ந்தது 
பேய் மழையாய் மாறிய சாரல்
சிறிதும் களைப்பின்றி தொடர்ந்தது
கவலையைக் களைந்த என்னுடல்
சலிப்பின்றி நனைந்து களித்தது
சட்டென மனம் இடறியது
கணத்தில் இதயம் கனத்தது
என்னைத் திட்ட இப்போது
உயிரோடில்லா அன்னையை
என் கண்முன் நிறுத்தியது
எனை நனைத்த மழை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com