எனை நனைத்த மழை; பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
பால்வாயில்   மார்பிருந்து   தமிழோ   டூட்டி            பண்பாட்டைத்  தாலாட்டில்   இசையோ  டூட்டிவேல்வீரம்  ஒழுக்கத்தை   மதிகாட்  டூட்டி            வியர்வைவிழ   உழைக்கத்தன்   மானம்  ஊட்டிதோல்விகளே   வந்தென்னைக்   குலைத்த   போது            தோள்தட்டி   நம்பிக்கை   நெஞ்சில்   ஊட்டிஆல்விழுதாய்   நான்வளர   வேராய்   நின்றே            அன்பாலே   எனைநனைத்த   மழைதான்   அன்னை !தன்னுடைய   பெற்றோரைச்   சுற்றத்   தாரைத்            தான்பிறந்த   இடந்தன்னைப்   பிரிந்து   வந்தேமுன்பின்னே   அறியாத   புகுந்த  வீட்டின்            முழுப்பெருமை   காக்கின்ற   உறுதி   யோடேஇன்பத்தில்   துன்பத்தில்   தோளாய்   நின்றே            இல்லறத்து   விளக்குதனில்   ஒளியாய்   நின்றேஎன்பெயரைச்   சொல்லபிள்ளை   பெற்ற  ளித்தே            எனையன்பால்   நனைத்திட்ட   மழைதான்   இல்லாள் !நல்லொழுக்கம்   பண்பாடு   கல்வி   தன்னை            நாள்தோறும்   கற்றுயர்வாய்  வளர்ந்து   நின்றுசொல்லாலும்   செயலாலும்   சங்க   நூல்கள்            சொல்கின்ற   அறவழியில்  நாளும்  நின்றுநல்லவனாய்   வல்லவனாய்   நேர்யை   யாக            நற்செயல்கள்   தன்னழைப்புப்   பொருளில்   செய்துபல்லோரும்   போற்றயென்றன்    பெயரைக்   காத்துப்            பாசத்தால்   எனைநனைத்த   மழைதான்   பிள்ளை !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com