எனை நனைத்த மழை " ரீகன். ஜெ

Updated on
1 min read

குடையைத் துறந்து நினைவைச் சுமந்து
மனதைக் குடைந்த செல்லமழை

என் 
மனதைக் கடக்காத புயலின் மழை

நனைக்கவும் நினைக்கவும் செய்த மழை
எனை சிலிர்த்திடச் செய்த உன் சீற்றமழை

அற்புதமானது
நனைக்கும் மழை
ஆனந்தமானது
நினைக்கும் மழை

காளான்களாகக் கவிதைகள்
செழிக்கப் பாறையை நெகிழ்த்திய பருவமழை

இது நாணலை நனைத்த மழை

எல்லா மழையும் சேர்ந்து
பொழிந்தால்
எப்படி தாங்கும் இந்த நிலம்?
எனது இதயம் கரைந்து வழியும் நிதம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com