எனை நனைத்த மழை :- ஆ.மகராஜன்

Updated on
1 min read

வறண்டு வெடித்த
வயல்வெளியில் நின்றவனை 
வானிலிருந்து கடவுளின் 
கரங்களாய்
நீண்டு தீண்டின தூறல்கள்.

கண்களில் துளிர்த்த 
கண்ணீரோடு கலந்து
உடல் வழி ஊர்ந்து
உப்பு சுவைக் கூட்டி
வழிந்த நீர் 
காய்ந்த வெடிப்புக்
கீறல்களுள் புகுந்து 
காணாமல்  போயிற்று
கணப் பொழுதில்.

மழையாய்ப் பரிணமிக்க 
மறுதலித்து அவன்பால்
கருணையும் கவலையும் 
கொள்ளாத் தூறல் 
நின்று போனதில்,
வானம் பார்த்து நின்றவனின்
விழிவழி  வழிந்த 
கண்ணீர் நில்லாது போயிற்று..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com