எனை நனைத்த மழை;  H ஹாஜா மொஹினுதீன்

Updated on
1 min read

குடை பிடித்துச் சென்றாலும் ;
குதூகலத்துக்கு பஞ்சமில்லை !
துளித்துளியாய் கொட்டும் நீரில் ;
துள்ளி விளையாடும் குழந்தை நான் !

கால்களெல்லாம் நனைகையிலே ;
கவலையெல்லாம் கலையுதே !
மாதம் மாறி பெய்யும் மழையில் ;
மனதெல்லாம் நிறையுதே ! 

எனை நனைத்த மழையே !
வானம் பாத்த பூமியும் ;
வாய் பிளந்து கிடக்குது !
நிலத்தையே நம்பியவன் ;
நீருக்காக கெஞ்சுகிறான்  !

விதைத்தவனோ விரக்தியிலே -
வீடு திரும்ப மறுக்கிறான் !
வஞ்சிக்காமல் வந்துவிடு -
வாழ்வின் வசந்தம் தந்துவிடு !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com