எனை நனைத்த மழை :- ஆ.மகராஜன்

Updated on
1 min read

காய்ந்து வெடித்த
நிலத்தில் நின்றவனை 
வானிலிருந்து கடவுளின் 
விரல்களாய்
நீண்டு தீண்டின தூறல்கள்.

கண்களில் துளிர்த்த 
கண்ணீரோடு கலந்து
உடலின் வழி ஊர்ந்து
உப்பு சுவைக் கூட்டி
வழிந்த நீர் 
காய்ந்த வெடிப்புக்
கீறல்களுள் புகுந்து 
காணாமல்  போனது..

தூறல் நின்று போனதால்,
வானம் பார்த்து நின்றவனின்
கண்களில் வழிந்த 
கண்ணீர் நிற்கவேயில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com