துவைத்த தாவணியின்
கடைசி சொட்டு நீரை
வைரமாக பத்திரபடுத்துகிறேன்...
*மாங்கு மாங்கென
அம்மியில் அறைந்த
உளுந்தப்பருப்பு துவையலின்
கூடுதல் சுவையே உன் நெற்றிநீரின்
வியர்வை துளிதான்...
*சொட்ட சொட்ட
நனைந்த கருங்கூந்தலோடு
பால்கனி ஓரத்தில்
படக்கென்ன கூந்தலை அடித்துஓடிவரும்
சிறு தூரல் தான் ஜம் ஜம் ஊற்று எனக்கு ...
*நீ
வாசல் தெளித்த
வாளி தண்ணீரெல்லாம்
புனிதநீர் தான்...
* நீ நீர் தெளித்த சாரலில்
பூப்பெய்தியது
பருவ காதல்....
*வெட்க மழையில்
நனைத்துவிட்டு போகிறாய்
உன் ஒற்றை புன்னகையில்
எப்படி துவட்டிக்கொள்ள
முடியும் என்னால்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.