வெற்றி முரசு " ரீகன். ஜெயக்குமார்

Updated on
1 min read

வையகத்தில்
தெளிந்தோடும் நீரோடையிலும் 
கலங்குதல் நடக்கலாம்..

நம்மை சுற்றியுள்ளோர்களின் நடத்தைகளும் 
கலங்குதலைச் செய்யலாம்

கலங்கியபின் தெளிவதும் 
நடந்திடும் காரியமே....

தெளிவான மனங்கள் கூட 
தாக்குதலாலும் , சாடுதலாலும் 
கலங்கிடும் நிலை காணலாம்...

பொறாமை உள்ளங்கள் 
அர்த்தமற்ற வார்த்தைகள் வீசி

அமைதியாம் மனதிலே 
கவலையெனும் கலங்குதலை 
வேண்டுமென்றே உருவாக்கலாம் ..

தைரியமற்ற நிலைதானும் 
மனங்களில் இருந்தால் 
கலங்குதலும் வேகமாகலாம் ..

தெளிவதும் மெதுவாகலாம்...

சமூகமொன்றின் கட்டமைப்பை 
கலைத்திட நினைப்போர் 
திட்டமிட்டே செயலொன்றை 
வன்செயலால் தொடங்கலாம்...

கலங்கி நின்றால் வென்றிடுவார்..
துணிந்து நின்றால் தயங்கிடுவார்..

வீறுநடை போட்டு 
வீரமதை தனதாக்கி 
வெற்றி பல கண்டிட்ட 
பண்பாட்டிலுயர்ந்த தமிழினமே ...

மனம் கலங்காமலே வாழ்ந்திடு ..
உன் பலத்தை எதிரிக்கும் காட்டிடு ....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com