வெற்றி முரசு:  கவிஞர் ரீகன்

Updated on
1 min read

அனைத்தும் நிறைந்த அகிலத்தில்

மனிதனே உனக்குள்
தாழ்வு எழுவதேன் ???

சறுக்கி ஏறும்.. வழுக்கு மரம் கூட
சறுக்காமல் தரும் வெற்றி..

சாதிக்க வயதில்லை..மனம் எழுந்தால்
சரித்திரங்கள் தூரமில்லை..

மனதறியா குருவிகளும்..
மாட மாளிகை கூடு கட்ட..

ஏக்கப் பெருமூச்சு விட்டு--தினம் தினம்
ஏழ்மையில் தவிப்பதேன் ???

விழுந்த விதைகள் கூட
வீரத்தோடு எழுந்து நிற்கும்...ஈரம் பட்டால்.

விட்டுப்போன சொந்தங்களும்..உன்னை ஒரு
எட்டு வந்து பார்த்திடவே...மனிதா
சாதிக்க நினைத்திடு..

சரித்திரங்கள் படைத்திடு....
புன்னகைத்து வாழ்ந்திடு...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com