அரியாசனம் :  ஆபிரகாம் வேளாங்கண்ணி

Updated on
1 min read

காக்கையின் கூட்டிலே
குயில்கள் கூட்டம்  கூடி
காக்கையை விரட்டி 
கூட்டை கைப்பற்றியே
என் கூடெனக் கூறியதே 
அது குயிலின் அரியாசனம்
என்பின் ஞாயமுண்டோ

அப்போதைக்கு விரலை
கொடுக்கப்பட்டிருப்பதே 
இப்போதைக்கு உரலை
இழுக்கும் அவலங்களும் 
கைப்பற்றிட அரியாசனம்

எப்போதைக்கும் விரும்பாத 
அரியாசனம்  அமர்ந்திட
இப்போதைக்கு விரும்பும்
உள்நோக்கம் என்னவானது 
மக்களே தீர்மானிப்பர்

குளத்தில் வாழும் தவளை
தன்வாயால் தானேகெடும்
அரியாசனமா அமரும்?
காணாமல் போகலாம் 
காலம் கதை கூறலாம் 

சிலர் சிலரை பழித்தீர்க்க
தீயோரை கைக்கோர்க்க
தனக்கே தலை வலியாகி
உயிரையே துறப்பாரோ
அரியாசனம் இழப்பாரோ

வச்சி வையுங்கள் என் பங்கை 
வனவாசம் முடிந்தப்பின்பு வந்து

பெறும் வரைக்கும் அந்த
நிலை காணப்படுகிறது
அரியாசனம் அலங்கரிக்க  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com