அரியாசனம்: -உத்ரன்

Updated on
1 min read
அரியாசனமா?!
அது எனக்கு வேண்டாம ப்பா!
சரியாசனம் 
தந்தாலே போதும ப்பா!
அரியாசனத்தில் 
அமரும் பல பேர்...
நிம்மதி கெட்டு
நீள் துயில் கெட்டு
அமைதி கெட்டு
ஆளுமை கெட்டு
சுற்றம் கெட்டு 
சுகங்கள் கெட்டு 
எல்லாம் கெட்டு 
அவர்களும் கெட்டு
விட்டால் போதுமென்று 
விழுந்தடித்து ஓடுவதை
சரித்திரம் நன்றாய்
பதிவில் வைக்கும்!
அரியாசனத்துக்கு ஆசைப்பட்டு
தனியாசனம் இழந்தோர் கதைகள்
பலவும் இந்தப் பாரினில் உண்டு!
வேண்டாம் நமக்கு எந்த ஆசனமும்!
பறவைகள் போல...
தடம் ஏதும் பதிக்காமல்...
பறந்து வாழ்ந்து 
முடிப்போம் பிறவியை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com