மனிதன் பாதி விலங்கு பாதி என்றான் கவிஞன் நீ என்ன ஆசனமா?உரைகல்லா? மனித வேசம் கலைக்கிறாய் மனிதனை முழு விலங்காக மாற்றிகாட்டுகிறாய் மீன்போல்தூண்டில் புழுவிற்கு இரையாகிறான் ஆடு போல் அடைபடுகிறான் குதிரை போல் பேரம் பேசப்படுகிறான் பச்சோந்தியாக மாறுகிறார்கள் குரங்காக தாவுகிறார்கள் புலியாக உறுமுகிறான் நாய் போல் அலைகிறான் நாங்களும் தேடுகிறோம் கவரிமானை இங்கே உன்னில் அமர