அரியாசனம்: சசி எழில்மணி

Updated on
1 min read

மனித குணங்களை அழித்துக்கொண்டு
நம் மனங்களையெல்லாம் மறந்துவிட்டு
பதவி ஒன்றை மனதில் வைத்து
பணமிருந்தால் போதுமென்ற எண்ணங்கொண்டு
அதிகார ஆசையில் அகங்காரம் கொண்டு
நீதியினை வேரறுத்து
கூடா செயல்களைக் கூசாமல் செய்வார்
தானென்ற அகந்தையில் பொதுநலம் துறப்பார்

உலகினில் எதுவும் நிலையில்லை
ஆறடி நிலம்கூட சொந்தமில்லை
எதுவும் நம்முடன் வருவதில்லை
வாழ்க்கையில்  இதைநாம் உணர்வதில்லை

கடந்தவைகளை மறந்துவிட்டு
நிகழ்வுகளில் கவனம்கொள்வோம்
எதிர்காலத்தை மனதில் கொண்டு
நல்லுறவை நாம் வளர்ப்போம்
உலகில் சிறந்த அரியாசனம்
மக்கள் மனங்களில்  நாம் இருப்போம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com