அரியாசனம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read

ஆவிற்கு   இழைத்திட்ட   அநீதிக்   காக
            அரும்புதல்வன்   உயிர்கொடுத்து   நீதி   காத்தும்
நாவிற்சொல்   தவறிட்ட   தவறுக்   காக  
            நறும்உயிரைத்   தானீந்து   நீதி   காத்தும்
கோவிலுக்குள்   அமர்ந்தருளைப்   பொழிந்து   காக்கும்
            கோவாக   இருந்திட்ட   ஆட்சி  பீடம்
பாவிகளின்  பலிபீட   மாக   மாறிப்
            பழிசுமந்த   பீடமாக    ஆன   தின்று !

பசிவந்தால்   பத்தும்போம்   என்ப   தைப்போல்
            பதிவியாசை   வந்தாலும்   போகும்   என்னும்
அசிங்கத்தை   அரங்கேற்றித்   தமிழ   கத்தின்
            அரும்பெயரைப்    பெருமையினைத்   தாழ   வைத்தார் !
பசித்தாலும்  புல்தின்னாப்   புலிதாம்   என்னும்
            பழக்கத்தை    விட்டின்று   நரக   லையும்
புசித்திடுவோம்    அரியணையில்   அமர்தற்   கென்று
            புவிதனக்குக்   காட்டிட்டார்   உறுப்பி   னர்தாம் !

கொள்ளையினை    அடித்ததற்குத்     தண்ட   னைதாம்
            கொடுத்தபின்பும்    கொள்ளையினை   அடிப்ப   தற்கே
கொள்ளையராய்க்    கூடியுள்ளார்   ஓரி    டத்தில்
            கோட்டையிலே   கோலோச்சும்   பதவிக்   காக !
கள்ளராக    மாறிவிட்ட    சட்ட   மன்ற
            கயவரினை    ஓடஓட   விரட்டி   விட்டே
உள்ளத்தில்   தூய்மைதொண்டு    கொண்டி   லிங்கும்
            உத்தமரை   அரியணையில்   அமர   வைப்போம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com