நிலாவிடும் தூது: ஆபிரகாம் வேளாங்கண்ணி

Updated on
1 min read

காதல் என்பது நிஜம் தான்
ஒருசேர மூதலிப்ப தென்று
அன்றன்றோ மனம் மகிழும்
ஒரு முனையில் ஆதவன்
மறு முனையில் மாது அவள்
நிலாவிடும் தூது நிலவிடும்


கலந்திருந்ததால் சுகமுண்டு
மானிடத்து இனம் பெருகும்
எனக்காய் நீயுமாய் மாறாய்
உனக்காய் நானுமாய் நன்கு
காத்தலிலும் சுகம் உண்டு
நிலாவிடும் தூது இது


கனவில் கண்ட  அவனை
நினைவில் நிரடிக்கொண்டு
சுனையில் புரண்டு தினம்
நித்திரை வேண்டி வெறும்  
மாத்திரை உண்பதினால்
நிழல் நிஜமாகிவிடுமோ
நிலாவிடும் தூது இது


காலம் துணை நில்லும்
ஞாலம் கதை சொல்லும் 
இதயம் வதை தள்ளும்
எண்ணம் நிறைவேறுமோ என்று
கரை சேரும்  அன்றே
பரிகாரம்  நிலாவிடும் தூது


அடங்கி ஒடுங்கி மடங்கி
வாழ்ந்தால் தப்பு இல்லை
நடுங்கி கிடுங்கி பதுங்கிய
வாழ்வோ வாழ்வு இல்லை
மென்மையே பெண்மையே
உண்மையினை உணர்த்து
நிலாவிடும் தூது யோசனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com