நிலாவிடு தூது: சு.ஜெயக்குமார்

Updated on
1 min read

கவியொருவன் மனவலியில்
கண்ணீரோடு தூதனுப்புகிறேன்
வாக்கினை வஞ்சகனுக்கு விற்றுவிட்டு
வாழ்க்கையை வாங்க இயலாது
வயல்வெளியெல்லாம்  அழித்துவிட்டால்
வாய்க்கரிசி வெளிநாட்டில் கிடைக்காது 
குடியில் நாளெல்லாம் கழித்துவிட்டவன்
குடி உயர வழியேது
வீதியில் பெற்றோரைத் தவிக்கவிட்டு
கோவில்கள் சென்றாலும் புண்ணியமேது 
ஊழல் பெருச்சாளியாய் உலாவந்து
கலிகாலமிதுவென்றால் பொருளேது
அநீதியை கட்டவிழ்த்து ரசித்துவிட்டு
மழை வேண்டினால் பயனேது
பணமும் பதவியுமே குறிக்கோளாயின்
வாழ்வில் நிம்மதி காண்பதேது
தன் மதி கேளா மானிடனுக்கு 
வான்மதியே நீ இதை சொல்லாயோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com