நிலாவிடு தூது : லட்சுமிபாலா

Updated on
1 min read

தூது செல்வாயோ முழுநிலவே
என்னவளிடம்
நின் போல்முழுநிலவே 
என்னவளின் வதனம் அதனால் 
என்னவளை இனம் காண உனக்குஎந்த
இடரும் இல்லை உன் குணம்ஒத்ததே
என்னவளின் குணமும்
மேகங்களுடே நீ மறைந்து 
விளையாடுவது போல் 
அவளும் தன் முகம் மறைத்து 
என்னை சீண்டுவது வாடிக்கை

அமாவசையன்று நீ பூமியுடன் ஊடல்
கொண்டு பாராமுகம் கொள்வது போல் 
அவளும் என் மேல் அவ்வப்போது
ஊடல் கொள்வதுண்டு கொஞ்சம்
கேட்டு வருவாயா? ஊடல் 
கொண்டாளோ? என்று.
உன் மூன்றாம் பிறை ஒத்தது
அவளது புன்சிரிப்பு.

அமாவாசை கடந்த பத்து நாள் 
நிலவை ஒத்த அவள் முகம் 
நீ ஊடல் தணிந்து
பூமியை மேகங்களுடே 
மறைந்து பார்ப்பது போல்
அவள் வீட்டு சன்னலில் என்னைத்
தேடி பாதி மறைந்து நிற்பதை நான்றிவேன்
பெளர்ணமியன்று நீ பூமி மேல் பொழியும் பால் 
வெளிச்சம் ஒத்தது என்னவள் என் மேல் வீசும்
காதல் பார்வை
தூது செல்வாயோ முழுநிலவே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com