காதலர்க்கு வழி சொன்ன
களங்கமில்லா வெண்ணிலாவே
கூவத்தூர் கடலோரம்
நாங்கள் கூடியிருந்த நேரம்
கொஞ்சம் வந்து
சொல்லியிருக்கக் கூடாதா?
கூடாரம் மாறி வந்து
கூவினோமே அநீதி என்று
அப்போதாவது சொல்லியிருக்கலாமே?
இப்போதும் பாதகமில்லை
பக்குவமாய் ஒரு வழி கேட்டுச்சொல்
மக்கள் எண்ணம் பெரிதல்ல
என் மக்கள் வாழ வழி சொல்லு
எவ்வழியிலாயினும்
என் குடும்பம் மட்டும் வாழ வேண்டும்
கச்சிதமாய் ஒரு வழி கேட்டு
நாளை வந்து நீ சொல்வாயா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.