தேய்பிறை கண்டும்
வளர்பிறை கொண்டும்
மாறிடும் வான்நிலா
சோகத்தை உள்வைத்து
புன்னகை சிந்திடும்
நீயன்றோ பால்நிலா
தென்றலும் தீண்டவே
மேகங்கள் கலையுமே
தாலாட்டும் வானம்
நானாக மாற
திரைபோட்ட கைகளை
இளமனம் விளக்குமே
வசந்தகால அழைப்புகள்
இரவினில் தொடருமே
குளிரும் இளமனம்
பனியில் நனையும்
பார்த்திடும் பார்வைகள்
தூதாய் அமையுமே
சொல்லிடும் வார்த்தையில்
தேன்துளி சிதருமே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.