நிலா விடு தூது: பூ.சுப்ரமணியன்

Updated on
1 min read

அவள்
காதல்விழிகள் பட்டு
மலர் மொட்டுக்களே
மணமுடன் மலரும்போது
அவன் இதயம் காதலில்
மலராமல் இருக்குமா ?

அவள் காதலன்
அந்தரங்கமான காதலை
கவிதைகளாக – அவள்
இதயத்தில் செதுக்க
காத்துக் கொண்டிருந்தான் !

அவன் இனிய காதலி
அவனை மறுத்த
அந்தக்கொடிய நாளை
மதுக்கோப்பைகளில்
மயங்கி விழாமல்
கரைக்க நினைக்காமல்

அவள் காதலன்
வானில் முகம்காட்டும்
முழு நிலாவிடம்
மறக்க முடியாத காதலை
காதல் கவிதைகளாக 
புலம்பித் தீர்த்தான் !

அவன் புலம்பல்
காதலிக்கு காதில்
விழவில்லையானால்
அவன் தூது விட்ட
முழுநிலாவிடம்
அவன் இனிய காதலி
கேட்டுப் பார்க்கட்டும்!

அவள் காதலனை
என்றாவது ஒருநாள்
நிலாவும் தூது சென்று
அடையாளம் காட்டும்
காதல் கவிதைகளாக
அவன் காதலியிடம்
அவனை அறிமுகப்படுத்தும் !         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com