நிலா விடு தூது: அ.வேளாங்கண்ணி

Updated on
1 min read
தனியாய் தவம் செய்யும் நிலவேஉனைவிட்டுச் சென்றது யார்?இணையாய் நீ இல்லை இங்குதீவினையைச் செய்தது யார்?எனைப்போல் நீயும் இங்கேதவிப்பாய்இருப்பது எனக்கும் வலிஎனக்காக உதவி நீ செய்துகாட்டுவாயோ காதல் வழி?என் கவிதை வரிகளைக் கொண்டுஉனக்கான ஆறுதல் செய்வேன்என் காதல் தீபத்தை ஏற்றிஎனக்குள்ளே மாறுதல் செய்யேன்உன் பார்வை படும்வேளை அவளைஎன் பாட்டை உணர்த்திடுவாயாஎன் பக்கம் வரச்சொல்லி நீயும்எனக்காக வாதம் செய்வாயாபிடிவாதம் அவள் குணம் தானேபிடி கொடுத்திட‌ மாட்டாளேஅடி நூறு வாங்கவும் தயாரேஎன்பதை நீயும் சொல்வாயாஇதய வலி தாங்குதல் கஷ்டம்மருந்தென்றால் காதல் மட்டும்துடிக்கிறேன் தவிக்கிறேன்காதல் வேண்டிஆக்கிட வேண்டாம் ஆண்டிஎனை அவள் சேர்ந்திடும் வேளைஉன்புகழ் உலகில் சொல்வேனேஎனக்காக நீ தூது சென்றதைஎன்கவி வழியே சொல்வேனே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com