நிலாவிடு தூது: மீனாள் தேவராஜன்

Updated on
1 min read

நிலா விடு தூது
காலையில் கண்படும் நீ
மாலையில் எங்கு செல்வாய்
மலையில் மறைந்திட்டாய் என 
மக்கள் நினைப்பர்
ஞாலம்விட்டுச் சென்ற என் 
கோலமணியிடம் நீயெனக்கு
மெல்லமெல்ல தூது சென்றதை 
யார் அறிவார்
மங்கையைக் கண்ட 
நாள் முதல் மதியிழந்தேன்
செவ்வாய் சீராளைக் காணாது 
கதியிழந்தேன்
பித்தம்கொண்டு அவளைக்காண 
திரிந்தழைகிறேன்
புத்தியில் புகுந்து விட்டாள் 
சித்தமும் தெளிவிழந்தேன்  
ஊனில் உயிரில் 
உணர்வில் கலந்ததால்
எனை வாட்டும் துன்பத்திற்கு அருமருந்தாய்
என்மனக்கண் நிறைந்தாளிடம் தூது செல் 
வானில் உலாவும் மங்கிய நிலவே
போனவளைக் கொண்டுவரத் தூது செல்லாய்! 
ஊன் கலந்தாளை என் உள்ளப்பயிர் செழிக்க
என் கையறுநிலை கூறிக் காதல் வாழ 
தேனிலாவைத் தேடி நிலாவே தூது செல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com