புதியடைரி : அழகூர். அருண். ஞானசேகரன்

Updated on
1 min read

புத்தாண்டுக்  குறிப்பேட்டில்  நல்லநல்ல  செய்தியையே
                பொழுதெல்லாம்  எழுதவேண்டும்;
        போனஆண்டு  தனில்நிகழ்ந்த  வேண்டாத  நிகழ்வுகள்
                புத்தாண்டில்  நிகழவேண்டாம் !
எத்தனையோ  அவலங்கள்  தன்னைநாம்  கண்டிட்டோம்
                என்றும்நம்  நினைவில்நிற்கும்;
        எல்லாமும்  மோடியால்  வந்திட்ட  வினையாகும்
                இந்தியர்கள்  மறக்கமாட்டார் !
உத்தமமோ  பணத்தாள்களை  செல்லாதென  ஆக்கியதும்
                 உரியநல்  பலன்கிடைத்ததா ?
        ஒழியுமோ  கருப்புப்  பணமதுவும்  லஞ்சமதும்
                 ஊழலதும்  நாட்டிலினிமேல் ?
நித்தமொரு  திருத்தமதை  மோடியவன்  சொன்னதேன்
                 நினைத்துநாம்  சிரிக்கத்தானோ ?
        நிறைவான  மதிதன்னைக்  கொள்ளாதான்  மோடியென
                 நிரூபணம்  ஆனதுண்மை !

புதுவருடக்  குறிப்பேட்டில்  புலம்பல்களே  இல்லாமல்
மதுரமிகுச்  செய்திகளே  மணக்கட்டும்;-- பொதுவாக
நன்றான  ஆட்சிகண்டு  நலன்களெல்லாம்  மலியட்டும்;
என்றென்றும்  தொடரட்டும்  இது!

பதினாறாம்  ஆண்டுக்  குறிப்பேட்டில்---நாம்
          பார்த்தவை  அனைத்தும்  அவலங்கள்!
மதிகெட்டச்  செயலென்றே  ஆனதென்ன---பணத்தாள்
          மாற்றமும்  மக்களை  வறுத்ததென்ன!
சதிகாரர்  மல்லையா  லலித்மோடி---போன்றோர்
          சத்தமே  இல்லாமல்  தப்பியதென்ன?
புதியயிவ்  ஆண்டின்  குறிப்பேட்டில்---இதுபோல்
          போக்கற்றச்  செய்திகள்  வேண்டாமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com