புதியடைரி : சௌம்யநாராயணன் 

Updated on
1 min read

அற்பக்காகிதமே ,
எத்தனை நாள் என் கிறுக்கல்களை 
சுமக்கப் போகிறாய் ? 

என்னை தனியாய் தோல்வியில் விட்ட 
சமுதாயத்தின் மீதுள்ள கோபத்தை உன்னிடம் 
தான் காட்டுகிறேன்,

சக உயிரிடம் நான் படும் அவமானங்களை 
உனக்கு பரிசாக அளிக்கிறேன்,
நீயோ மௌனத்தால் என்னை சந்தாப்படுத்துகிறாய் .
வீரியம் கொண்டெழும் 
என் சொல் விந்துகளை நீ சுமந்து .
நினைவுக் குழந்தைகளை நிதம் பிரசவிக்கிறாய் ? 
மலடியாக நீ இருந்திருக்கலாம், 
நான் திரும்பிப்பார்க்கையில் 
வெறுமை இருந்திருக்கும்.
இல்லை இல்லை , 
என் ஏமாற்றமான வாழ்வின் ஒரே வெற்றி  நீ தான் . 
வருடம் முடியும் போது நீ உன்னையே புதுப்பித்து
புது மணப்பெண்ணாக 
எனக்காக காத்திருக்கிறாயே.
வா நாளைய நம் புதுப் பக்கங்களாவது ,
என்னால் உனக்கும் 
உன்னால் எனக்கும் 
மகிழ்ச்சியாகட்டும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com