புதிய டைரி:  சசி எழில்மணி

Updated on
1 min read

நாட்குறிப்பின் பக்கங்கள்
நேற்றோடு நிறைந்தது

நிலையில்லா வாழ்க்கையில்
நிறைவில்லா நிகழ்வுகள்
பக்கங்களில் உறங்குது

தோல்வியின் தடங்களும்
வெற்றியின் சுவடுகளும்
கற்றுத் தந்த
பாடங்கள் அனைத்தும்
அனுபவமாய் ஆனது
 
நான் கற்ற பாடத்தில்
வெற்றி எனும் இலக்கை
அடைகின்ற முயற்சியில்

குன்றாத வளமுடன்
குறைவிலா நற்செயல்கள்
நடக்குமென்ற நம்பிக்கையில்
 
கைகளில் ஏந்தினேன்
(புதியதோர் நாட்குறிப்பு)
புதிய டைரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com