நாட்குறிப்பின் பக்கங்கள்
நேற்றோடு நிறைந்தது
நிலையில்லா வாழ்க்கையில்
நிறைவில்லா நிகழ்வுகள்
பக்கங்களில் உறங்குது
தோல்வியின் தடங்களும்
வெற்றியின் சுவடுகளும்
கற்றுத் தந்த
பாடங்கள் அனைத்தும்
அனுபவமாய் ஆனது
நான் கற்ற பாடத்தில்
வெற்றி எனும் இலக்கை
அடைகின்ற முயற்சியில்
குன்றாத வளமுடன்
குறைவிலா நற்செயல்கள்
நடக்குமென்ற நம்பிக்கையில்
கைகளில் ஏந்தினேன்
(புதியதோர் நாட்குறிப்பு)
புதிய டைரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.