புதிய டைரி : கவிஞர் மா.உலகநாதன்

Updated on
1 min read

எழுதிப்பாராதவன் வாழ்க்கை 
கழுதை புரண்ட களம்,
எங்கேயோ படித்த வாசகம்;

ஏக்கத்துடன் காத்திருக்கிறது என்முன்னே 
புதிய டைரி .
இவன்,
கற்றதை எழுதுவானா?பெற்றதை எழுதுவானா?
மற்றதைஎழுதுவானா?
ஏக்கத்துடன் காத்திருக்கிறது என்முன்னே 
புதிய டைரி .

நாளின் பதிவுகளை நாள் சென்று பார்க்கும்போது 
நமக்குள்ளே பல உணர்வலைகள்; 
சில பதிவுகள் வரலாறாகும்,
சிலவோ சிலைமேல் எழுத்தாகும்;

புத்தாடை,புது உறவு ,புதுடைரி 
ஆசையெல்லாம் 

ஆண்டுத்துவக்கத்தில் அலைமோதும் !
பூண்டு முடிந்துவிட்டால் புதுவேகம் குறையும்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com